Tuesday, January 27, 2026

அதானி டிவிக்காரன் கணக்கே தனிதான் . . .

 




அடுத்த கேரளா முதல்வர் யாரென்று அதானி முதலாளியாக உள்ள என்.டி. டிவி ஒரு கணக்கு போட்டுள்ளது.


அதில் 16.9 % ஐ விட 14.7% பெரியதாக இருக்கிறது.

அது மட்டுமல்ல மார்க்சிஸ்ட் கட்சிக்கு இரண்டு முதல்வர், காங்கிரஸ் கட்சிக்கு இரண்டு முதல்வர் என்று பிரித்து பித்தலாட்டம் செய்துள்ளது.

அப்படி செய்தும் பாஜக முதல் இடத்திற்கு வர முடியலையே அதானி!

எப்படி இருந்த என்.டி, டிவி இப்படி ஆயிடுச்சே!

Monday, January 26, 2026

ஜெயலலிதா ஆகப்போகிறாரா விஜய்?

 


கீழேயுள்ள செய்தியை பாருங்கள்


2001 சட்டப்பேரவை தேர்தலின் போது டான்சி வழக்கிலும் பிளசன்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கிலும் ஏ1 ஜெயலலிதாவிற்கு தண்டனை கொடுக்கப்பட்டு இருந்தது. அவர் வேட்பு மனு தாக்கல் செய்தால் அது கண்டிப்பாக நிராகரிக்கப்படும் என்பது தெளிவாகவே தெரிந்தது.

அதனால் அவர் என்ன செய்தார்?

ஆண்டிப்பட்டி, புதுக்கோட்டை, புவனகிரி, கிருஷ்ணகிரி என்று நான்கு தொகுதிகளில் வேட்பு மனு செய்தார்.

அதனால் அவர் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது.

ஊழல் வழக்கில் தண்டனை பெற்றதற்காக நிராகரிக்கப்பட்டது என்பதற்காக இரண்டிற்கும் மேற்பட்ட தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்ததால் நிராகரிக்கப்பட்டது என்று வரலாற்றில் பதிவாகி விட்டது.

அது போல

தெர்தலில் போட்டியிட்டு தோற்றார் என்று வரலாற்றில் பதிவாகுவதற்கு பதிலாக வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதால் போட்டியிடவே முடியவில்லை என்று வரலாற்றில் பதிவு செய்ய விரும்புகிறாரா விஜய்?

புஸ்ஸி அதைத்தான் சொல்கிறாரா?

கொடி பறக்கட்டும்

 


இந்தியராய் பிறந்த அனைவருக்கும்
சமூக நீதி,
பொருளாதார சமத்துவம்,
அரசியல் சமத்துவம்
கிடைத்திடவும்


கருத்துரிமை, 
எழுத்துரிமை,
பேச்சுரிமை
வழிபாட்டுரிமை,
கிடைப்பதை உறுதி செய்திடவும்

சமத்துவமும் சம வாய்ப்பும் 
அனைவர் மத்தியில் நிலவிடவும்
உறுதியேற்ற
சோஷலிச, மதச்சார்பற்ற, இறையாண்மை கொண்ட,
இந்திய ஜனநாயகக் குடியரசு நாட்டின்
மூவர்ணக்கொடி 
அரசியல் சாசனத்தின் அனைத்து விழுமியங்களையும்
பறை சாற்றி உயரத்தில் பறக்கட்டும்.

பாழ்படுத்த நினைக்கும் வீணர்களை
வீழ்த்தட்டும் இந்திய ஜனநாயகம்.
காவிக்கொடியை புறந்தள்ளி 
ஜனநாயகத்தின் பாதுகாவலர்களின்

செங்கொடியும் பட்டொளியும் வீசி பறக்கட்டும்.

மீள் பதிவு 

Sunday, January 25, 2026

கடைசியில் எஸ்கேப்பான மாலன்

 


ரொம்ப நாள் கழித்து மாலன் மீண்டும் மாட்டிக் கொண்டார்

மூத்த எழுத்தாளர் திரு வண்ணதாசன், துக்ளக் பத்திரிக்கையின் முன்னாள் துர்வாசர், எழுத்தாளர் வண்ணநிலவனின் ஒரு முகநூல் பதிவு பற்றி தன் ஆதங்கத்தை பகிர்ந்து கொண்டிருந்தார்.


சங்கியான வண்ணநிலவனுக்கு வக்காலத்து வாங்கிக் கொண்டு வந்த மூத்த்த்த்த்த்த்த்த மாலன், பதிப்பாளர்கள் மீதும் வாசகர் மீதும் தனக்கிருந்த எரிச்சலை கொட்டினார்.



ஆஹா, தானா வந்து சிக்கினவரை சும்மா விடலாமா என்று சூடாக ஒரு கேள்வி கேட்டேன். 



இத்தோடு விட்டு விட முடியுமா?

சாகித்ய அகாடமியின் தமிழ்நாடு பொறுப்பாளராக இருந்த அவரை அது பற்றி கேள்வி கேட்காமல் விட்டு விட முடியுமா?  அந்த விவாதத்தை கீழே பாருங்கள்.



பாவம் மாலன்!

அரசின் நிலையை ஆதரித்தால் மானத்தை வாங்கி விடுவார்கள். கண்டித்தால் பிழைப்பு போய் விடும்.  அது புரிந்ததும் போனால் போகட்டும் என்று ஒரு சிரிப்போடு நிறுத்திக் கொண்டு விட்டேன்.


Saturday, January 24, 2026

புது வசந்தம் சார்லியும் தவெக தற்குறியும்

 


புது வசந்தம் படத்தில் சித்தாரா, தன் பெயரை சுவரில் எழுதியதும் அதை "கெ ள ரி" என்று படிப்பார்.

அது சினிமாவுக்கான காமெடி, கிட்டத்தட்ட முப்பத்தி ஐந்து வருஷத்துக்கு முந்தைய காமெடி.

அந்த காமெடியை நிஜமாக்கியுள்ளார் ஒரு தவெக தற்குறி

நீங்களும் அந்த காமெடியை பாருங்கள்.

ஒரிஜினல் பதிவை எழுதியவரை தவெக தற்குறி,  தற்குறி கொத்தடிமை என்று சொன்னதுதான் மிகப் பெரிய கொடுமை.

தவெக கட்சியில் கூட யாருக்கோ கொஞ்சம் அறிவும் கூச்சமும் இருக்கிறது என்பதையும் தெரிந்து கொள்ள முடிந்தது. 

பிரான்ஸ் ராணியும் ரங்கராஜ் பாண்டேவும்

 


கீழே உள்ள காணொளியை முதலில் பாருங்கள்


இரண்டாம் வகுப்பு ஸ்லீப்பர் பெட்டிகள் குறைக்கப்பட்டு விட்டது என்ற தோழர் கனகராஜ் அவர்களின் குற்றச்சாட்டிற்கு  வந்தே பாரத் ரயில்கள் இருக்கிறதே என்று சொல்லி வாங்கிக் கட்டிக் கொண்டார்.

பிரான்ஸ் நாட்டு மக்கள் பிரெட் கிடைக்கவில்லையே என்ற துயரத்தை சொன்ன போது, பிரெட் இல்லையென்றால் என்ன கேக் சாப்பிடுங்கள் என்று ஆணவத்தோடு சொன்ன ராணி மேரி அண்டோனியாவிற்கும் ரங்கராஜ் பாண்டேவிற்கும் பெரிய வித்தியாசம் கிடையாது.

திமிரெடுத்த ராணிக்கு கில்லட்டினில் சிரச்சேதம் கிடைத்தது. இந்தியா ஜனநாயக நாடு என்பதால் பாண்டேவின் தலை தப்பித்தது. 

Friday, January 23, 2026

நீதிபதியிடம் சில கேள்விகள்

 


சனாதன ஒழிப்பு என்றால் சனாதனத்தை பின்பற்றும் அனைவரையும் கொன்று விடுவது என்று புதிய அர்த்தம் சொல்லியுள்ள நீதியரசியால் என்னுடைய சில கேள்விகளுக்கு விளக்கம் அளிக்க முடியுமா?

"காங்கிரஸ் முக்த் பாரத்" என்பதை பாஜக பல வருடங்களாக சொல்லிக் கொண்டிருக்கிறது.

அதாவது காங்கிரஸ் இல்லாத இந்தியா என்பதை இலக்கு என்று சொல்கிறது. அப்படியென்றால் பாஜக, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அனைவரையும் கொன்று விட திட்டமிட்டுள்ளது என்று சொல்லலாமா?

கழகங்கள் அற்ற தமிழகம் என்பதை கொஞ்ச நாட்களுக்கு முன்பாக தமிழ்நாட்டு பாஜக சொல்லிக் கொண்டிருந்தது.

அப்படியென்றால் திமுக மற்றும் இப்போது பாஜகவின் அடிமையாக மாறியுள்ள அதிமுக ஆகிய இரண்டு கட்சி உறுப்பினர்களையும் ஒழித்து விட வேண்டும் என்று பாஜக சொன்னதா?

சனாதனம் என்பது ஒரு கருத்தியல்.  பிறப்பில் வேற்றுமை கற்பிக்கிற பிற்போக்குக் கருத்தியல், பெண்களை அடிமைகளாக அடக்கியாள துடிக்கும் கருத்தியல், மாற்று மதங்களுக்கு எதிரான கருத்தியல்.

சனாதனம் என்ற கருத்தியலை ஒழிப்போம் என்றால் அதனை சனாதனத்தை பின்பற்றுபவர்களை ஒழிப்பது என்ற புனிதமான புரிதல் உங்களுக்கு எந்த போதிமரம் கொடுத்தது?

உங்களுக்குத் தெரியுமா?

ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்களின் கோட்பாடுகளை உருவாக்கிய கோல்வால்கரின் படி திரிசூலத்தின் மூன்று முனைகள் அழிக்க வேண்டியவர்கள் முஸ்லீம்கள், கிறிஸ்துவர்கள், கம்யூனிஸ்டுகள் என்று எழுதியே வைத்துள்ளார் என்று.

அவரது சடலத்தை தோண்டி எடுத்து நடவடிக்கை எடுப்பீர்களா?