இன்று
சங்கிகளின் ட்விட்டர் பக்கங்கள் அனைத்தும் மார்ட்டின் திமுகவிற்கு கொடுத்த 500 கோடி ரூபாய் பற்றியே கூறியிருந்தது.
ஆம்,
திமுக 500 கோடி ரூபாய் வாங்கியிருந்தது உண்மைதான். அது எதற்காக என்பதை அந்த கட்சிதான்
விளக்க வேண்டும்.
நிற்க
மார்ட்டினிடமிருந்து திமுக பணம் பெற்ற விஷயத்தை புலனாய்வுப் புலிகள் என்று நினைத்துக்
கொண்டிருக்கிற, நேர்மையின் பிம்பங்கள் என்று தங்களை கருதிக் கொண்டிருக்கிற சங்கிகள்
யாரும் கண்டுபிடிக்கவில்லை. மாறாக தாங்கள் வாங்கிய தேர்தல் பத்திர விபரங்களை திமுக
தேர்தல் ஆணையத்திற்கு தெரிவித்திருந்தது. அதை வைத்துத்தான் சங்கிகள் ட்வீட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்தியாவிலேயே
அதிக தொகைக்கு, அதாவது 1368 கோடிக்கு தேர்தல் பத்திரம் வாங்கியது மார்ட்டின்தான்.
அதில்
திமுகவிற்கு கிடைத்தது 500 கோடி ரூபாய் என்றால் மீதமுள்ள 868 கோடி ரூபாய் போனது யாருக்கு?
பாஜக
ஏன் தாங்கள் வாங்கிய தேர்தல் பத்திரம் பற்றி வாய் திறக்கவேயில்லை?
மார்ட்டினிடம்
நாங்கள் பத்து லட்ச ரூபாய் கூட (தேர்தல் பத்திரம் வாங்க குறைந்த பட்ச தொகை பத்து லட்ச
ரூபாய்) வாங்கவில்லை என்று ஏன் பாஜகவால் சொல்ல முடியவில்லை.
அந்த
868 கோடி ரூபாய் அவர்களுக்குத்தான் சென்றதால்தான் பாஜக கள்ள மௌனம் சாதிக்கிறதா?